அடடே மனோகர்

வியாழன், 5 நவம்பர், 2009

14 வானாகி, மண்ணாகி



தாளம் : ஆதி (திஸ்ர நடை) ராகம் : ஆனந்தபைரவி

வானாகி, மண்ணாகி, காற்றாகி, கனலாகி, நீராகிய பின்னே
ஊனாகி உயிர்களாகி நின்றாய்; பின் மனமாகவும்
மாற்றம் கொண்டாய்
... வா

நானாகயிருக்கும் வரை நான் வேறு நீ வேறு
தானாகிப் போவதுதான் கிடைத்தற்கரிய பேறு
... வா

பொல்லாத உயிர்களும் புனிதமாய்த் தெரிய வேண்டும்
இல்லாத பேர்களுக்கு இன்முகத்துடன் ஈய வேண்டும்
கல்லாக உள்ள நெஞ்சம் கனிவாக குழைய வேண்டும்
எல்லோரும், எல்லாமும் நீயாய் நான் காண வேண்டும்.
... வா

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்