அடடே மனோகர்

வியாழன், 5 நவம்பர், 2009

74 நம் கையில் ஏதுமில்லை





தாளம் : ஆதி ராகம் : கல்யாணி

நம் கையில் ஏதுமில்லை நன்குணர்ந்தால் இல்லை தொல்லை
நலமுடன் வாழ நல்வழி வேறில்லை
... நம்

உம்மென்றில்லாம உணர்ச்சிவயப்படாமல்
கம்மென்றிருப்பததன் கருணையினால் தானாகும்
... நம்

மூவாசை துறப்பது நாம் முயன்றாலும் ஆகாது
நாவாசை என்பதும் நம்மை விட்டு போகாது
பேராசை எனும் பிணியில் பிடிபட்டு வேகாது
நிராசை நிலை நாதன் நினைத்தாலன்றி வாய்க்காது
...நம்

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்